கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2020 ஜூலை 24ம் திகதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவிருந்த ஒலிம்பிக் 2020 போட்டித் தொடர் ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இப்போட்டிகளில் 11 ஆயிரத்துக்கு அதிகமான வீரர்கள் கலந்து கொள்ள இருந்த நிலையில் 57 வீதமான வீரர்கள் தகுதிபெற்றிருந்தனர். இந்நிலையில் போட்டித் தொடர் கைவிடப்பட்டிருந்ததால் அவ்வீரர்கள் தேர்வு குறித்த குழப்பம் ஏற்பட்டிருந்தது.
இதையடுத்து 32 சர்வதேச விளையாட்டுக் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் காணொளிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தியுள்ளது.
இவ் ஆலோசனை கூட்டத்தில் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போதே இதுவரை 2020 ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற வீரர்கள் 2021 ஒலிம்பிக் போட்டிகளுக்கு நேரடியாக பங்கேற்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: விளையாட்டு, புதிது
Tags: